செராஸ்-ல் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், தைவான் நாட்டைச் சேர்ந்த யூடியூப் பிரபலம் ஒருவரை தாக்கி கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக 4 பெண்கள் உட்பட உள்ளூரைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவருக்கு சுமார் 35 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 26 முதல் 48 வயதுக்குட்பட்ட 8 ஆண்கள், 4 பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 7 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் 5 பேர் நாளை ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்படவுள்ளதாக கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ ஃபடில் மர்சுஸ் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், மேலும் ஒரு சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர்.








