Aug 11, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியாவில் கைதான மலேசிய விமானியை விசாரிக்க புக்கிட் அமான் அதிகாரிகள் பயணம்
தற்போதைய செய்திகள்

இந்தோனேசியாவில் கைதான மலேசிய விமானியை விசாரிக்க புக்கிட் அமான் அதிகாரிகள் பயணம்

Share:

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இந்தோனேசியா, ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட மலேசிய விமானியிடம் விசாரணை நடத்த புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் இந்தோனேசியா செல்லவுள்ளனர்.

அடுத்த இரண்டு நாட்களில் விமானியிடம் விசாரணை நடத்தப்படும் என அதன் இயக்குநர் ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

அவரிடமிருந்து பெறப்படும் தகவல்களை மலேசியாவில் ஏற்கனவே திரட்டப்பட்டுள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு, போதைப்பொருள் கடத்தல் கும்பலின் பின்னணியை கண்டறிய இந்த விசாரணை உதவும் என அவர் கூறினார்.

இதுவரை மலேசியாவில் நான்கு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், எனினும் போலீஸ் துறையின் முக்கிய கவனம் போதைப்பொருள் கடத்தல் கும்பலை கண்டறிவதிலேயே இருப்பதாகவும் ஹுசேன் தெரிவித்தார்.

Related News