Aug 11, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர்கள் நலனைப் பாதுகாப்பது அம்னோ  மட்டுமா?” – தாபோங் ஹாஜி விவகாரத்தில் ஆர்.எஸ்.என்   ராயர் சரமாரி கேள்வி
தற்போதைய செய்திகள்

மலாய்க்காரர்கள் நலனைப் பாதுகாப்பது அம்னோ மட்டுமா?” – தாபோங் ஹாஜி விவகாரத்தில் ஆர்.எஸ்.என் ராயர் சரமாரி கேள்வி

Share:

அரசாங்கத்தில் அம்னோ மற்றும் பாரிசான் நேஷனல் இல்லாவிட்டால், மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்களின் நலன்கள் பாதுகாக்கப்படாது” எனக் கூறிய முன்னாள் சுகாதார அமைச்சருக்கு ஜேலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் இன்று மக்களவையில் கடும் பதிலடி கொடுத்தார்.

தாபோங் ஹாஜியின் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, அதன் நிர்வாகத்தில் யார் பொறுப்பில் இருந்தனர்? அப்போது என்ன நடந்தது? என அவர் கேள்வி எழுப்பினார்.

அந்தக் காலக்கட்டத்தில் நிதியமைச்சராக இருந்த லிம் குவான் எங், தாபோங் ஹாஜியின் நிதி நிலையை மீட்டெடுக்க 19.9 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிதியை சிறப்பு நோக்கத்திற்கான ஒரு நிறுவனத்தின் மூலம் வழங்க ஒப்புதல் அளித்ததாக ராயர் சுட்டிக்காட்டினார்.

“எல்லாவற்றுக்கும் ஜசெக -தான் காரணமா? தாபோங் ஹாஜியின் நஷ்டத்திற்கும் ஜசெக. -தான் காரணம்” எனக் கூறுவது உண்மையை மறைக்கும் அரசியல் குற்றச்சாட்டு என்றும் ராயர் சாடினார்.

Related News