Aug 12, 2026
Thisaigal NewsYouTube
லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி
தற்போதைய செய்திகள்

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

Share:

லெபனான் நாட்டைச் சேர்ந்த நகை நிறுவனமான குளோபல் ராயல்டி டிரேடிங் எஸ்.ஏ.எல்-க்கு செலுத்த வேண்டிய 67.46 மில்லியன் ரிங்கிட்டை, அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் உள்ள வரை, தற்காலிகமாக நிறுத்தி வைக்க, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மான்சோருக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், முழுத் தொகையையும் இருதரப்பு வழக்கறிஞர்களின் கூட்டு வங்கிக் கணக்கில் ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ரோஸ்மா-வின் மேல்முறையீடு தோல்வியடையும் பட்சத்தில் அத்தொகையானது குளோபல் ராயல்டி நிறுவனத்திற்குக் கிடைப்பதையும், வெற்றி பெற்றால் அத்தொகையானது ரோஸ்மா-விடமே திரும்புவதையும் இந்த ஏற்பாடு உறுதி செய்யும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஜூன் 10-ஆம் தேதி, குளோபல் ராயல்டி-க்கு 67.5 மில்லியன் செலுத்துமாறு ரோஸ்மா-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கடந்த 2018-ஆம் ஆண்டு, ரோஸ்மாவிற்கு பார்வையிடுவதற்காக வழங்கப்பட்ட 44 ஆடம்பர நகைகளில் 43 நகைகள் திருப்பி வழங்கப்படவில்லை எனக் கூறிய அந்நிறுவனம், இழப்பீடு கோரி, அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது

Related News

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது

MyNIISe QR பயனர்களுக்கு பீ.எஸ்.ஐ-யில் முன்னுரிமை குடிநுழைவு சோதனை

MyNIISe QR பயனர்களுக்கு பீ.எஸ்.ஐ-யில் முன்னுரிமை குடிநுழைவு சோதனை