2026 தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 26 முதல் 31ஆம் தேதி வரையில், கோலாலம்பூர் முனையக் கட்டுப்பாட்டு வான்வெளிப் பகுதி, தற்காலிகமாக மூடப்படும் என மலேசிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையமான மலேசியா வான் போக்குவர்த்து துறை (சி.எ.எ.எம்) அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், வரும் ஆகஸ்ட் 26 முதல் 28-ஆம் தேதி வரை, காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில், ஒத்திகைக்காகவும், ஆகஸ்ட் 29 மற்றும் 31ஆம் தேதிகளில், காலை 8.45 மணி முதல் 9.45 மணி வரை முழு ஒத்திகை மற்றும் அதிகாரப்பூர்வ விமான அணிவகுப்பிற்காகவும், கே.எல்.ஐ.ஏ-வில் விமானங்கள் புறப்படுவதும், தரையிறங்குவதும் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
இந்த நேரங்களில் கே.எல்.ஐ.ஏ வழியாகப் பயணிக்கும் பயணிகள், தங்களது விமான நேரங்களில் மாற்றம் ஏற்படக்கூடும் என்பதால் விமான நிறுவனங்களிடம் நேரடியாக உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு சி.எ.எ.எம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, சம்பந்தப்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி ட்ரோன்களைப் பறக்கவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.








