கோலாலம்பூர், ஏப்ரல்.29-
பெண்களின் தேவைகளை உணர்ந்து, அவர்களுக்கு ஏற்ற வகையிலான பொதுப் பயன்பாட்டு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கூட்டரசுப் பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ வலியுறுத்தியுள்ளார்.
கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான பெண்கள் உரிமை மீதான மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஹன்னா இயோ, போதிய பொது வசதிகள் இல்லாததே பெண்கள் உடற்பயிற்சி போன்ற உடல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தடையாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, உடற்பயிற்சிக்குத் தேவையான பொதுக் குளியலறை வசதிகள் இல்லாத போது, பெண்கள் அலுவலகம் செல்வதற்குச் சிரமப்படுகின்றனர். முடிவெடுக்கும் இடங்களில் பெண்கள் குறைவாக இருப்பதால், இத்தகைய அடிப்படைத் தேவைகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகின்றன. எனவே, கோலாலம்பூரில் அதிகளவில் பெண்களுக்கான பொதுக் குளியலறை வசதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஹன்னா இயோ கேட்டுக் கொண்டார்.








