Jan 20, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் கருத்துவேறுபாட்டை பகைமையின் ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது
தற்போதைய செய்திகள்

அரசியல் கருத்துவேறுபாட்டை பகைமையின் ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது

Share:

ஒருவருக்கொருவர் இடையில் நிலவி வரும் அரசியல் கருத்துவேறுபாட்டை, பகைமையின் ஆயுதமாகவும், அவதூறுகளின் ஊற்றுக்கண்ணாகவும் பயன்படுத்தக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
பகைமையும், அவதூறுகளும் மேலோங்கி, ஒருவருக்கொருவர் இரு துருவங்களாக பிரிந்து கிடப்பதைவிட நாட்டின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஆக்கப்பூர்வமான யோசனைகளையும், பரிந்துரைகளையும் ஒருவருக்கொருவர் முன் வைக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றப் பின்னர் நாட்டிற்கு நன்மை அளிக்கக்கூடிய சிறப்பான, ஆக்கப்பூர்மான பரிந்துரைகளை தாம் இன்னும் கேட்கவில்லை என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இன்று நீலாயில் புறநகர் தொழில்முனைவர்களுக்கான கண்காட்சியை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.
அமைச்சரவைக்கூட்டத்தில்கூட அமைச்சர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன. அப்படியிருந்தும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இறுதியில் ஒரு முடிவை எடுக்க கட்டாயம் ஏற்படுகிறது என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் பக்காத்தான் ஹராப்பானுக்கும், பாரிசான் நேஷனலுக்கும் இடையிலான உறவு நன்றாக இல்லை என்பது உண்மைதான். ஆனால், நல்லுறவு மலர இன்னும் காலம் தேவைப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு