மாற்றான் மனைவியை வசீகரித்து, தன் வசமாக்கி கொள்ளும் ஆண்களின் செயல், சட்ட ரீதியாக ஒரு குற்றச்செயலாக கருதப்பட வேண்டும் என்று பாஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அப்பெண், தன் விருப்பத்தின் பேரில் தன்னுடன் வந்துள்ளார் என்று எந்தவொரு ஆணும் வியக்கியாணம் செய்ய முடியாது. இத்தகைய ஒழுக்கக்கேடான நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட ஆண்ணுக்கு உரிய தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும் என்று பாஸ் உலாமா மன்றத்தின் தலைவர் டத்தோ அஹ்மாட் யஹயா தெரிவித்தார்.
திருமணமான பெண்களை ஆசை காட்டி மயக்குவதை குற்றம் என்று வகைப்படுத்தும் தண்டனைச் சட்டத்தின் 498 ஆவது பிரிவு சட்டவிரோதமானது என்று கடந்த வாரம் வெள்ளிக்கிழமை புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து அந்த உலாமா தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.








