May 27, 2026
Thisaigal NewsYouTube
வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம்: மூன்று ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம்: மூன்று ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

Share:

டிச. 24-

கடந்த அக்டோபர் மாதம் வழக்கறிஞர் ஒருவர், கும்பல் ஒன்றினால் இரும்புத் தடியினால் தாக்கப்பட்டு, காயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று ஆடவர்கள் இன்று ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

36 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூன்று சீன ஆடவர்கள், மாஜிஸ்திரேட் Nadratun Naim Saidi முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் பினாங்கு, Persiaran Karpal Singh சாலையோரத்தில் இன்னும் பிடிப்படாமல் இருக்கும் மேலும் ஒரு நபருடன் கூட்டாக சேர்ந்து 37 வயது வழக்கறிஞர் Beh Hong Shein என்பவரை இரும்புத் தடியினால் தாக்கி காயப்படுத்தியதாக அந்த மூவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

விற்பனை அதிகாரிகளான அந்த மூவரும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் கூடியப் பட்சம் 10 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு