May 15, 2026
Thisaigal NewsYouTube
அபராதம் செலுத்தாத வெளிநாட்டு வாகனங்களுக்கு சிங்கப்பூர் தடை
தற்போதைய செய்திகள்

அபராதம் செலுத்தாத வெளிநாட்டு வாகனங்களுக்கு சிங்கப்பூர் தடை

Share:

சிங்கப்பூரில் போக்குவரத்து, வாகன நிறுத்தம் அல்லது புகை உமிழ்வு தொடர்பான அபராதங்களைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள வெளிநாட்டு வாகனங்களுக்கு, வரும் நவம்பர் 2 ஆம் தேதி முதல் வாகன நுழைவு அனுமதியான வி.இ.பி. மற்றும் அதனைப் புதுப்பிக்கும் அனுமதிகள் மறுக்கப்படும். தற்போதைய நடைமுறைப்படி, அபராதம் செலுத்தாத வாகனங்கள் சிங்கப்பூர் எல்லைச் சோதனைச் சாவடிகளுக்கு வந்த பிறகே அவற்றின் நுழைவு மறுக்கப்படுகிறது.

புதிய விதியின்படி, வெளிநாட்டு வாகன ஓட்டிகள் தங்களின் VEP அனுமதிக்கு விண்ணப்பிக்கும் முன்பே axs.com.sg என்ற இணையதளத்தில் நிலுவை அபராதங்களைச் சரிபார்த்துச் செலுத்த வேண்டும். அதன் பின்னரே எல்.டி.ஏ ஒன்மோட்டரிங் இணையதளத்தில் நுழைவு அனுமதியைப் புதுப்பித்து சிங்கப்பூருக்குள் நுழைய முடியும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Related News