சுபாங் ஜெயா, ஏப்ரல்.06-
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட பெர்சியாரன் ஹார்மோனி சுற்றுப்புறத்தில் உள்ள 439 வீடுகளை அதிகாரிகள் மதிப்பீடு செய்திருக்கின்றனர். இதில் 220 வீடுகள் பாதுகாப்பானவை என்றும், 320 வீடுகள் இன்று முதல் பழுதுபார்த்து குடியிருக்கலாம் என்றும் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
வெடிப்பு ஏற்பட்ட இடத்திலிருந்து 325 மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளின் கட்டமைப்பு மலேசிய தீயணைப்பு - மீட்புத் துறையால் மதிப்பிடப்பட்டது. பாதிக்கப்பட்ட 219 வீடுகளில், 87 வீடுகள் 20 விழுக்காட்டிற்கும் அதிகமாக பெரிய சேதமடைந்தவையாகவும், 132 வீடுகள் 20 விழுக்காட்டிற்கும் குறைவான சிறிய சேதமடைந்தவையாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 151 வீடுகள் மீண்டும் குடியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன, இதில் கம்போங் கோல சுங்கை பாருவில் உள்ள 21 வீடுகளும் அடங்கும். பொதுப்பணித்துறை, தீயணைப்பு - மீட்புத் துறை, டிஎன்பி ஆகியவற்றால் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பானவை என சான்றளிக்கப்பட்ட வீடுகளுக்கு மட்டுமே மின்சாரமும் தண்ணீர் விநியோகமும் வழங்கப்பட்டு மீண்டும் குடியிருக்க அனுமதிக்கப்படும். இன்று வரை 40 வீடுகளில் குடியிருப்பாளர்கள் மீண்டும் குடியேறிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.








