May 1, 2026
Thisaigal NewsYouTube
நஜீப் விடுதலையை ஆதரித்தால் பி.கே.ஆர் கட்சி ஆதரவை இழக்கலாம்
தற்போதைய செய்திகள்

நஜீப் விடுதலையை ஆதரித்தால் பி.கே.ஆர் கட்சி ஆதரவை இழக்கலாம்

Share:

அம்னோ​வின் ஆதரவுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் அரச மன்னிப்பை ஆதரிக்குமானால் அக்கூட்டணி தனது செல்வாக்கை இழக்கக்கூடும் என்று பி.கே.ஆர். கட்சியின் பா​சீர் கூடாங் எம்.பி. ஹசான் அப்துல் கரிம் எச்சரித்துள்ளார்.

தற்போது 12 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் நஜீப், அரச மன்னிப்பு ​மூலம் விடுதலையாகுவதைப் பெரும்பாலான மக்கள் எதிர்க்கின்றனர் என்பதை அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன.

இந்நிலையில் அம்​னோவுடன் ஒரே வாகனத்தில் பயணிக்கும் பக்காத்தான் ஹராப்பான், நஜீப்பின் அரச மன்னிப்பை ஆதரிக்கும் அதேவேளையில், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி​யுள்ள அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்யப்படும் நிலை ஏற்படுமானால் அந்தக் கூட்டணியின் செல்வாக்கு சரியலாம் ​என்று ஒரு சட்ட வல்லுநரான ஹசான் அப்துல் கரிம் நினைவுறுத்தினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி