Mar 19, 2026
Thisaigal NewsYouTube
கல்லறைகளுக்கும் டிஜிட்டல் முகவரி: மலாக்காவில் முதன் முறையாக ‘டிஜிட்டல் கல்லறை’ திட்டம்!
தற்போதைய செய்திகள்

கல்லறைகளுக்கும் டிஜிட்டல் முகவரி: மலாக்காவில் முதன் முறையாக ‘டிஜிட்டல் கல்லறை’ திட்டம்!

Share:

அலோர் காஜா, அக்டோபர்.19-

மலாக்கா மாநிலம், இனி கல்லறைகள் நிர்வாகத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி, "டிஜிட்டல் கல்லறை" எனும் அதிநவீனத் திட்டத்தை செயல்படுத்தும் முன்னோடி மாநிலமாக மாறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கல்லறையும் டிஜிட்டல் முறையில் எண் குறியீடு இடப்பட்டு, பாரம்பரிய கல்லறைகளின் நிர்வாகச் சவால்களைச் சமாளிப்பதன் மூலம் உறவினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகளை எளிதில் கண்டறிய முடியும்.

மலாக்கா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ராவுஃப் யுசோ இந்த அறிவிப்பை வெளியிட்டார். குறிப்பாக, காலப் போக்கில் கல்லறைகளின் அடையாளக் குறிகள் மறைந்து போகும் நிலையில், எதிர்காலத் தலைமுறையினர் கூட எந்தச் சிரமமுமின்றித் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளைப் பார்வையிடவும் பராமரிக்கவும் இந்த டிஜிட்டல் முறை உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

மஸ்ஜிட் தானாவில் உள்ள கம்போங் பூலாவ் எனும் பகுதி இத்திட்டத்தின் முதல் களமாகச் செயல்படும் என்றும், அதன் வெற்றியின் அடிப்படையில் இது மலாக்கா முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் அப்துல் யாவுஃப் யுசோ தெரிவித்தார். இந்தக் கனவுத் திட்டம், மலாக்காவின் வரலாற்றுப் பாரம்பரியத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து, மனிதர்களின் இறுதி ஓய்விட நிர்வாகத்தில் ஒரு புதிய மைல் கல்லைப் பதிக்கிறது.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்