ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.11-
பினாங்கு, பாகான் ஆஜாம் கடல் பகுதியில் சுமார் 700 ஆயிரம் லிட்டர் டீசலைச் சட்டத்திற்குப் புறம்பாகக் கடத்த முயன்ற இரண்டு கப்பல்களை மலேசிய கடலோர காவற்படை அதிரடியாகக் கைப்பற்றியுள்ளது. முறையான அனுமதியின்றி ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு டீசலை மாற்றிக் கொண்டிருந்த போது பிடிபட்ட இந்தக் கப்பல்களில் இருந்து, 5.43 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள டீசல், இரண்டு கப்பல்கள் என மொத்தம் 2.33 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தன் பினாங்கு மாநில இயக்குநர் கேப்டன் மாரிடிம் முஹமட் சுஃபி முஹமட் ரம்லி தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் மலேசியா, மியான்மார், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 22 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, முறையான ஆவணங்கள் இன்றி செயல்பட்டதற்காகப் பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.








