தலைநகர், ஜாலான் சிலாங்ஙிலும் லெபோ புடுவிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 9 வெளிநாட்டுவாசிகளின் வியாபாரங்களை முடக்கி அவர்களின் வணிகப் பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளது கோலாலம்பூர் மாநகர் மன்றம்.
தமது தரப்புக்குக் கிடைக்கப்பெற்றப் புகாரின் அடிப்படையில், குடிநுழைவுத் துறையுடன் இணைந்து அந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டிபிகேஎல் கூறியது.
அனைத்து வியாபாரங்களும் டிபிகேஎல்-இன் முறையான லைசன்ஸ் இல்லாமல் நடத்தப்பட்டதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் தாமான் மிஹார்ஜா செராஸ், ஜாலான் லொம்போங்ஙில் உள்ள டிபிகேஎல்-இன் ஸ்டோருக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அம்மன்றம் குறிப்பிட்டது.








