லஞ்ச ஊழல் தொடர்பில், மனிதவள அமைச்சர் வி.சிவக்குமாரிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். நேற்று 2 ஆவது முறையாக விசாரணை நடத்தியுள்ளது.
முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமைச்சர் சிவக்குமார், எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், நேற்று 2 ஆவது முறையாக அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதிலும், அந்த விசாரணை எங்கு நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.
தமது வீட்டில், எஸ்.பி.ஆர்.எம். சோதனை செய்யவில்லை என்று சிவக்குமார் அறிவித்திருந்த நிலையில், அமைச்சர் ஒருவரின் வீட்டில், சோதனை நடத்தப்பட்டது என்று எஸ்.பி.ஆர்.எம். உறுதிப்படுத்தியுள்ளது.

Related News

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு


