Mar 11, 2026
Thisaigal NewsYouTube
சிவக்குமாரிடம் 2 ஆவது முறையாக விசாரணை
தற்போதைய செய்திகள்

சிவக்குமாரிடம் 2 ஆவது முறையாக விசாரணை

Share:

லஞ்ச ஊழல் தொடர்பில், மனிதவள அமைச்சர் வி.சிவக்குமாரிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். நேற்று 2 ஆவது முறையாக விசாரணை நடத்தியுள்ளது.

முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமைச்சர் சிவக்குமார், எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், நேற்று 2 ஆவது முறையாக அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதிலும், அந்த விசாரணை எங்கு நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

தமது வீட்டில், எஸ்.பி.ஆர்.எம். சோதனை செய்யவில்லை என்று சிவக்குமார் அறிவித்திருந்த நிலையில், அமைச்சர் ஒருவரின் வீட்டில், சோதனை நடத்தப்பட்டது என்று எஸ்.பி.ஆர்.எம். உறுதிப்படுத்தியுள்ளது.

Related News