லஞ்ச ஊழல் தொடர்பில், மனிதவள அமைச்சர் வி.சிவக்குமாரிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். நேற்று 2 ஆவது முறையாக விசாரணை நடத்தியுள்ளது.
முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமைச்சர் சிவக்குமார், எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், நேற்று 2 ஆவது முறையாக அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதிலும், அந்த விசாரணை எங்கு நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.
தமது வீட்டில், எஸ்.பி.ஆர்.எம். சோதனை செய்யவில்லை என்று சிவக்குமார் அறிவித்திருந்த நிலையில், அமைச்சர் ஒருவரின் வீட்டில், சோதனை நடத்தப்பட்டது என்று எஸ்.பி.ஆர்.எம். உறுதிப்படுத்தியுள்ளது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


