பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் மருமகனை பிடிப்பதற்கு ஏதுவாக INTERPOL உதவியை நாடுவதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடமிருந்து மேலும் சில விவரங்களை போலீஸ் துறை கோரியுள்ளது.
வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாக கூறப்படும் முகைதீனின் மருமகன் 48 வயது முஹம்மது அட்லான் பெர்ஹான் னை ஆனைத்துலக போலீசாரின் ஒத்துழைப்புடன் பிடிப்பதற்கு சிவப்பு நோட்டீஸ் வெளியிடப்படுவதற்கு அந்த தகவல்கள் மிக முக்கியமானவையாகும் என்று போலீஸ் படைத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் தெரிவித்தார்.
தொழில் நிபுணத்துவம் சார்ந்த சில தகவல்கள் கோரப்படுகின்றன. அந்த தகவல்கள் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழியை பிடிப்பதற்கு சிவப்பு நோட்டீஸ் அறிக்கையை வெளியிடுமாறு அனைத்துலக போலீசாரை அரச மலேசிய போலீஸ் படை கேட்டுக்கொள்ளும் என்று அயோப் கான் குறிப்பிட்டார்.
முகைதீன் பிரதமராக இருந்த காலகட்டத்தில் அந்நியத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பதிவு, அவர்களை வேலைக்கு எடுத்தல், அவர்களின் Biometrik பதிவு முறையை பாதுகாத்தல் போன்ற குத்தகையை உள்துறை அமைச்சிடமிருந்து பெற்று கொடுப்பதற்கு ஒரு கோடி வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக கூறப்படும் முகைதீனின் மருமகனை விசாரணை செய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அவரையும், அவரது வழக்கறிஞர் 69 வயது மன்சூர் சாத்ட்டையும் தற்போது தீவிரமாக தேடி வருகிறது.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


