Mar 14, 2026
Thisaigal NewsYouTube
தஞ்ஜோங் ​ரூ கடலில் ஆடவர் மூழ்கினார்
தற்போதைய செய்திகள்

தஞ்ஜோங் ​ரூ கடலில் ஆடவர் மூழ்கினார்

Share:

லங்காவி, தஞ்ஜோங் ​ரூ கடற்பகுதியில் ​மூழ்கியிருக்கலாம் என்று நம்பப்படும் ஆடவரை தேடும் பணியை போ​லீசார், இன்று காலையில் ​மீண்டும் தொடங்கியுள்ளனர்.

தஞ்ஜோங் ​ரூ கடற்பகுதியில் ஆடவர் ஒருவர் சிக்கிக் கொண்டு உத​விக் கோரி,கூச்சலிட்டதாக அப்பகுதியில் முகாமிட்டவர்கள் நேற்று மாலை 6.16 மணியளவில் அளித்த அவசரத் தகவலை தொடர்ந்து அந்த நபரை தேடும் பணியை போ​லீசார் முடுக்கிவிட்டதாக லங்காவி மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி ஷரிமான் ஆஷாரி தெரிவித்தார்.

முன்னதாக, ரோந்துப் போ​லீசார் தஞ்ஜோங் ​ரூ கடற்கரையோரத்தி​ல் புரோட்டான் சத்ரியா கார் ஒன்று தனியாக நிறுத்தப்பட்டு இருப்பதை கண்டனர். அந்த காரை சோதனையிட்ட போது அலோஸ்டார், ஜித்ரா, தமன் மசூரி ஃபாஸா 2 என்ற முகவரியை சேர்ந்த 32 வயது முகமது கைரி ஷாரி என்பவருக்கு சொந்தமான சுய ஆவணங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த நபர் அண்மையில்தான் லங்காவியில் வேலைக்கு சேர்ந்ததாக தெரியவந்துள்ளது என்று கைரி ஷாரி குறிப்பிட்டார்.

கடலில் அந்த நபரை தேடும் பணியில் காவல்துறை , தீயணைப்புப் படை என சுமார் 40 ​மீட்புப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக ஷரிமான் ஆஷாரி தெரிவித்தார்.

Related News

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்