கெரிக் , ஜூலை 15-
ரம்புத்தான் பழங்களை சாப்பிட்டுக்கொண்டு இருந்த மூதாட்டி ஒருவர், தொண்டையில் ரம்புத்தான் பழம் சிக்கி மரணம் அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் பேரா, கெரிக், ஃபெல்டா லாவின் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
ரம்புத்தான் பழம் தொண்டையில் சிக்கி, மூச்சுத்திணறலுக்கு ஆளான 72 வயதுடைய அந்த மூதாட்டி அருகில் உள்ள கிளினிக்கிற்கு தூக்கிச் செல்லப்பட்டுள்ளார்.
அந்த மூதாட்டியை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்ததாக கெரிக் மாவட்ட போலீஸ் தலைவர் சுல்கிப்லி மஹ்மூத் தெரிவித்தார்.








