ஈப்போ, மார்ச்.17-
பொது கட்டடிங்களில் ஆபத்து, அவசர வேளைகளில் பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கையின் போது, கையாள வேண்டிய அணுகுமுறை தொடர்பான பயிற்சி, இன்று திங்கட்கிழமை ஈப்போ, உங்கு ஓமார், போலிடெக்னிக் கல்லூரியின் நடத்தப்பட்டது.
சிறப்பு நடவடிக்கை போலீஸ் பிரிவான கமாண்டோ 69 –வினால் நடத்தப்பட்ட இந்த அதிரடி பயிற்சியின் போது, உங்கு ஓமார், போலிடெக்னிக் கல்லூரியின் மாணவி ஒருவர் காயமுற்றார்.
பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கையின் போது, தங்களை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்து அளிக்கப்பட்ட பயிற்சியின் போது, 22 வயதுடைய அந்த மாணவி கீழே விழுந்து காயமுற்றதுடன் காலில் சுளுக்கு ஏற்பட்டதாக உங்கு ஓமார், போலிடெக்னிக் கல்லூரி வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்ததது.
இச்சம்பவத்தின் போது சுகாதார அமைச்சின் பணியாளர்களும் தயார் நிலையில் இருந்ததால் அந்த மாணவிக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர் என்று அந்த கல்லூரி குறிப்பிட்டது.
அரச மலேசியப் போலீஸ் படை, ஈப்போ மாவட்ட கட்டுப்பாட்டு மையம், உங்கு ஓமார் போலிடெக்னிக் கல்லூரி , ஈப்போ பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனை ஆகியவை இந்தப் பயற்சியில் பங்கேற்றன.








