May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஜோகூர் ஹாக்கி சங்கத்தின் மூத்த அதிகாரில் பிணையில் விடுவிக்கப்பட்டார்

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.16-

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 26 ஆயிரத்து 603 ரிங்கிட் தவறாகப் பயன்படுத்துதல், நிதி கையாடல் தொடர்பான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் ஜோகூர் ஹாக்கி சங்கத்தின் மூத்த அதிகாரி, பிணையில் விடுவிக்கப்பட்டார். நன்கொடையாளர்களிடமிருந்து உரிய அறிக்கையைப் பெறாததால் ஜாமீன் வழங்கப்பட்டதாக தலைமை ஆணையர் அஸாம் பாக்கி தெரிவித்தார். ஜோகூர் SPRM அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, சந்தேக நபர் ஐந்து நாட்கள் காவலில் வைக்கப்பட்டார். நன்கொடையாளர் எழுத்து, வாய்மொழி சாட்சியத்தை சமர்ப்பிக்க முன்வராததால் இன்று அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நிதி அறிக்கையை சீரமைக்க நன்கொடை அளித்தவர்கள் பற்றிய அறிக்கை எங்களுக்குத் தேவை. நன்கொடையாளர்களிடமிருந்து எந்த அறிக்கையும் பெறப்படாதபோது சந்தேக நபரை ஜாமீனில் விடுவிப்பது எங்கள் நிலையான நடைமுறையாகும் என்று அவர் கூறினார்.

நன்கொடையாளர் சாட்சியம் அளித்த பிறகு, சந்தேக நபர் மீண்டும் அழைக்கப்படுவார், வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. தேவையான அறிக்கைகள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கிடைக்கும் என்று SPRM எதிர்பார்க்கிறது என்று அஸாம் கூறினார். வழக்கு SPRM சட்டம் 2009 இன் பிரிவு 18 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது (தவறான உரிமைகோரல்களை சமர்ப்பித்தல் குற்றம்). மேலும் கருத்து தெரிவிக்கவோ அல்லது சாத்தியமான கண்டுபிடிப்புகளைப் பற்றி கூறவோ அவர் மறுத்து விட்டார்.

Related News