Sep 6, 2026
Thisaigal NewsYouTube
பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி
தற்போதைய செய்திகள்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

Share:

கோலாலம்பூரில் உள்ள பானாசோனிக் (Panasonic) தொலைக்காட்சி உற்பத்தித் தொழிற்சாலை மூடப்படுவதால் பாதிக்கப்படும் தொழிலாளர்களை, சிலாங்கூர் மாநில அரசு அடுத்த வாரம் நேரில் சந்தித்து மாற்று வேலை வாய்ப்புகள் மற்றும் இதர உதவிகள் குறித்து விவாதிக்கவுள்ளது.

இன்று நடைபெற்ற சிலாங்கூர் மெகா ஜோப்கேர் 2026 வேலை வாய்ப்பு துவக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, மாநில மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு மற்றும் 'பெர்கேசோ' (Perkeso) அதிகாரிகள் முன்னிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று தெரிவித்தார்.

பாதிக்கப்படும் 400 தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதோடு, மாற்று வேலைகளைக் கண்டறியவும் அரசு உதவும் என்று அவர் உறுதியளித்தார். இதற்கிடையே, வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு 'பெர்கேசோ' நிறுவனம் மூலம் முதல் மாதச் சம்பளத்தில் 80 விழுக்காடு தொடங்கி, அடுத்தடுத்த மாதங்களில் முறையே 50 மற்றும் 30 விழுக்காடு எனப் படிப்படியாக வேலை தேடும் உதவித்தொகை காப்புறுதி முறையில் வழங்கப்படும் என்று பாப்பாராயுடு விளக்கமளித்தார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து