இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகச் சந்தேகிக்கப்படும் பொருட்கள் அடங்கிய கன்டெய்னர் ஒன்றை, ஜோகூர், தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான எம்சிபிஏ நேற்று அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளது.
ரகசியத் தகவலின் பேரில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் பூர்வாங்க விசாரணையில், இஸ்ரேலுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்களை ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கும் '2023 சுங்கத் தடையாணைச் சட்டத்தின்' கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எம்சிபிஏ தெரிவித்துள்ளது.
"மலேசியாவின் கொள்கைகள் மற்றும் சட்டங்களுக்கு முரணாக இஸ்ரேலுக்குப் பொருட்களை அனுப்ப முயலும் எந்தவொரு முயற்சியும் சகித்துக் கொள்ளப்படாது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், '2010 ஆம் ஆண்டு வியூக வர்த்தகச் சட்டத்தின்' கீழ் கட்டுப்பாட்டிற்குரிய பொருட்களா என்பது குறித்து மற்ற முகமைகளுடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.








