தீபகற்ப மலேசியாவிலும், சரவாக்கிலும் வரும் வியாழக்கிழமை வரையில் பலத்த காற்றுடன் கனத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை இலாகாவான மெட் மலேசியா தெரிவித்துள்ளது.
திரெங்கானு, பகாங் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் அடை மழை பெய்யலாம் என்று அது தெரிவித்துள்ளது. மக்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கும்படி நினைவுறுத்தப்பட்டுள்ளது.








