சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தாபிஸ் சமயப் பள்ளி மையங்கள் மற்றும் தனியார் சமயப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படும் அவதூறு தொடர்பான செய்தி தொடர்பில் போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமார் கான் தெரிவித்துள்ளார். இத்தகைய அவதூறுகளை பரப்பியுள்ள நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷாகேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து தற்போது இவ்விவகாரம் விரிவாக ஆராயப்பட்டு வருவதாக டத்தோ ஹுசெயின் ஓமார் குறிப்பிட்டுள்ளார். விசாரணை அறிக்கை பின்னர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


