சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தாபிஸ் சமயப் பள்ளி மையங்கள் மற்றும் தனியார் சமயப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படும் அவதூறு தொடர்பான செய்தி தொடர்பில் போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமார் கான் தெரிவித்துள்ளார். இத்தகைய அவதூறுகளை பரப்பியுள்ள நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷாகேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து தற்போது இவ்விவகாரம் விரிவாக ஆராயப்பட்டு வருவதாக டத்தோ ஹுசெயின் ஓமார் குறிப்பிட்டுள்ளார். விசாரணை அறிக்கை பின்னர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


