சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தாபிஸ் சமயப் பள்ளி மையங்கள் மற்றும் தனியார் சமயப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படும் அவதூறு தொடர்பான செய்தி தொடர்பில் போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமார் கான் தெரிவித்துள்ளார். இத்தகைய அவதூறுகளை பரப்பியுள்ள நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷாகேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து தற்போது இவ்விவகாரம் விரிவாக ஆராயப்பட்டு வருவதாக டத்தோ ஹுசெயின் ஓமார் குறிப்பிட்டுள்ளார். விசாரணை அறிக்கை பின்னர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது


