Mar 14, 2026
Thisaigal NewsYouTube
தேசத் துரோகக் குற்றச்சாட்டில் ரஸாலி இட்ரிஸுக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

தேசத் துரோகக் குற்றச்சாட்டில் ரஸாலி இட்ரிஸுக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.05-

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, தேசத் துரோகக் கருத்துகளைக் கூறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த, கிஜால் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ரஸாலி இட்ரிஸுக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தமக்கு எதிரான தற்காப்பு வாதத்தில், அவர் நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தத் தவறி விட்டதாகக் கூறி நீதிபதி நோர்மா இஸ்மாயில் இத்தீர்ப்பை வழங்கினார்.

ரஸாலி இட்ரிஸ் தனது அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

கிஜால் சட்டமன்ற உறுப்பினரும், திரங்கானு மாநிலச் ஆட்சிக்குழு உறுப்பினருமான ரஸாலி இட்ரிஸ், கடந்த 2023-ஆம் ஆண்டு, நவம்பர் 10-ஆம் தேதி, கெமாமான், பாடாங் அஸ்தாக்கா சுக்காயில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்த தேசத் துரோகக் கருத்துகளை வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி, மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தனித்தனி நீதிமன்ற வழக்குகளில், இருவருக்கும் இடையிலான பாரபட்சமான நடத்தை குறித்து ரஸாலி இட்றிஸ் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்