இன்று சனிக்கிழமை நண்பகல் வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையானது, பினாங்கு, பேராக், பகாங் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பினாங்கு மாநிலத்தில் பாரத் தயா, திமூர் லாட் பகுதிகளிலும், பேராக் மாநிலத்தில் கிரியான்,லாரூட், மாடாங் மற்றும் செலாமா,மஞ்சோங், பாகன் டத்தோ, ஹிலிர் பேராக் ஆகிய பகுதிகளிலும் கனத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும் பினாங்கு மாநிலத்தின் குவாந்தான்,பெக்கான் மற்றும் சிலாங்கூர் மாநிலத்தின் சபாக் பெர்ணம் பகுதிகளுக்கும் அதே எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது.








