May 28, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் பிரதமரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை
தற்போதைய செய்திகள்

முன்னாள் பிரதமரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை

Share:

புத்ராஜெயா, மார்ச்.17-

வீடொன்றில் 177 கோடி ரிங்கிட் பெறுமானமுள்ள ரொக்கப் பணம், தங்கக் கட்டிகள் மற்றும் இதர விலை உயர்ந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரியிடம் இன்று நான்காவது நாளாக சுமார் 7 மணி நேரம் விசாரணை செய்யப்பட்டது.

காலை 9.50 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்குள் நுழைந்த இஸ்மாயில் சப்ரி, மாலை 4.30 மணிக்கு அங்கிருந்து வெளியேறினார்.

இஸ்மாயில் சப்ரியிடம் மேலும் சில விவரங்கள் கோரப்படுவதால், நாளை செவ்வாய்க்கிழமை அவர் மீண்டும் எஸ்பிஆர்எம் விசாரணையில் ஆஜராக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆணையத்தின் தகவல்கள் கூறுகின்றன.

கைது செய்யப்பட்டுள்ள தனது நான்கு முன்னாள் அதிகாரிகளின் ஒருவரின் வீட்டில் 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணம் மற்றும் 17 கிலோ எடை கொண்ட 70 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டது தொடர்பில் அந்த பணம் எவ்வாறு கிடைக்கப் பெற்றது என்பது குறித்து இஸ்மாயில் சப்ரியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்