Mar 23, 2026
Thisaigal NewsYouTube
6 நாடாளுமன்றத் தொகுதிகள் காலி செய்யப்பட வேண்டுமா? 21 நாட்களில் முடிவு செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

6 நாடாளுமன்றத் தொகுதிகள் காலி செய்யப்பட வேண்டுமா? 21 நாட்களில் முடிவு செய்யப்படும்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தெரிவித்தற்காக BERSATU கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதியை காலி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் கடிதத்தை அக்கட்சியிடமிருந்து தாம் பெற்றுள்ளதாக மக்களவை சபா நாயகர் Tan Sri Johari Abdul தெரிவித்துள்ளார்.

Bersatu கட்சியின் பொதுச் செயலாளர் Ronald Kiandee- யிடமிருந்து கடந்த வெள்ளிக்கிழமை அக்கடிதத்தை தாம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிகளை காலி செய்ய வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து அடுத்த 21 நாட்களுக்குள் முடிவு அறிவிக்கப்படும். அதுவரையில் பொறுமை காக்கும்படி அனைத்து தரப்பினரையும் Johari Abdul கேட்டுக் கொண்டார்.

Bukit Gantang, Labuan, Jeli, Gua Musang, Kuala Kangsar மற்றும் Tanjong Karang ஆகியவையே அந்த அந்த 6 நாடாமன்றத் தொகுதிகளாகும்.

6 தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிகளை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுமானால் அடுத்த 60 நாட்களுக்குள் அத்தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

Related News