கோலாலம்பூர், மே.27-
குறு, சிறு மற்றும் நடுத்தர MSME நிறுவனங்களின் நிதிச் செலவைக் குறைப்பதற்கும், முறையான வங்கிச் சேவையைப் பெற முடியாத நிறுவனங்களுக்கு மூலதன உதவி வழங்குவதற்கும் தீவிர முயற்சிகள் தேவை என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய விநியோகச் சங்கிலிப் பாதிப்பு மற்றும் புவிசார் பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் சிறு நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளன. போதிய கடன் பதிவுகள் இல்லாததால், மைக்ரோ மற்றும் சிறு வணிகங்கள் நிதி உதவி பெற இன்றும் சிரமப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசிய கடன் உத்தரவாதக் கழகத்துடன் நடைபெற்ற சந்திப்பில் பேசிய அமைச்சர் ஸ்டீவன் சிம், இந்த இடைவெளியைக் குறைக்க CGC-யின் உத்தரவாதத் திட்டங்கள் பெரிதும் உதவுவதாகக் கூறினார். மேலும், வணிகங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 'SME Corp' போன்ற அமைச்சின் கீழ் உள்ள ஏஜென்சிகள் , CGC உடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், MyKNP மற்றும் imSME போன்ற தளங்களை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








