May 27, 2026
Thisaigal NewsYouTube
மாணவனுக்குப் பாலியல் தொல்லை: பெசுட்டில் பள்ளி ஆசிரியருக்கு தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

மாணவனுக்குப் பாலியல் தொல்லை: பெசுட்டில் பள்ளி ஆசிரியருக்கு தடுப்புக் காவல்

Share:

பெசுட், மே.27-

பெசுட் பகுதியில் பள்ளி மாணவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரில், 42 வயது ஆசிரியர் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பெசுட் நீதிமன்ற மாஜிஸ்திரேட் நூர் லியானா முகமட் சுக்ரி இந்த உத்தரவைப் பிறப்பித்தார். பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்கள் அளித்த புகாரின் பேரில், நேற்று மாலை 3 மணியளவில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, இந்த பாலியல் விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related News