உலு சிலாங்கூர், மே.27-
உலு சிலாங்கூர், கம்போங் சுங்கை நீலாம், Sungai Selisek ஆற்றில் பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுவனைத் தீயணைப்புப் படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இன்று பிற்பகல் 1:40 மணியளவில் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்குக் கிடைத்த தகவலின்படி, கோலா குபு பாரு நிலையத்திலிருந்து ஐந்து வீரர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சுமார் 40 கிலோமீட்டர் தூரம் பயணித்து, மதியம் 2:35 மணியளவில் அங்கு சேர்ந்த மீட்புக்குழுவினர் தற்போது தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.








