கோலாலம்பூர், மே.27
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தைப்பிங் சிறைக் கலவரத்தின் போது, மருத்துவப் பணியாளர்கள் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் புகார் குறித்து சுகாதார அமைச்சு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை சுஹாகாம் (Suhakam) வெளியிட்ட பொது விசாரணை முடிவுகளைத் தொடர்ந்து, இந்தச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
போலி மருத்துவ அறிக்கைகள் தயாரிக்க மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் உடந்தையாக இருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அமைச்சு தீவிரமாக அணுகுகிறது. மருத்துவக் குறைபாடுகள் மற்றும் விதிகள் மீறப்பட்டதா என்பது குறித்து சுயேட்சை குழு விரிவான விசாரணை நடத்தும் என்று பொதுச் சுகாதாரத் துணை இயக்குநர் டாக்டர் இஸ்முனி போஹாரி தெரிவித்தார்.








