Aug 4, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 70% அதிகரிப்பு - சட்டமன்றத்தில் தகவல்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 70% அதிகரிப்பு - சட்டமன்றத்தில் தகவல்

Share:

கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் மாநிலத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாநில சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில மகளிர் மேம்பாடு மற்றும் சமூக நலக் குழுத் தலைவர் அன்ஃபால் சாரி கூறுகையில், 2021-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், குழந்தைகள் தொடர்பான 1,845 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அவற்றில், 1,654 உடல் ரீதியான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளும், 156 உடல்ரீதியற்ற பாலியல் துஷ்பிரயோக வழக்குகளும், 42 குழந்தைகள் ஆபாசப் படங்களை வைத்திருந்த வழக்குகளும், 24 ஆபாசப் படங்களை தயாரித்து அல்லது பரப்பிய வழக்குகளும் பதிவாகியுள்ளன என்றும் அன்ஃபால் சாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த அதிகரிப்பு கவலைக்குரியது என்றாலும், மக்கள் இது போன்ற குற்றங்களை அதிகாரிகளிடம் புகாரளிக்க முன்வரும் விழிப்புணர்வு அதிகரித்திருப்பதையும் இது காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு, பாதுகாப்பான தொடுதல் குறித்த கல்வி மற்றும் அவசர உதவிக்கான தொலைபேசி எண் 15999 பயன்பாடு தொடர்பான பல்வேறு திட்டங்களை மாநில அரசாங்கம் செயல்படுத்தி வருவதாகவும் அவர் விவரித்துள்ளார்.

Related News

  திவேட் நாட்டின் முதன்மைப் பாதை: மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உறுதி

திவேட் நாட்டின் முதன்மைப் பாதை: மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உறுதி

பாரம்பரிய கட்டிடத்திலிருந்து கான்கிரீட் இடிந்து விழுந்தது – இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா தம்பதி காயம்

பாரம்பரிய கட்டிடத்திலிருந்து கான்கிரீட் இடிந்து விழுந்தது – இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா தம்பதி காயம்

நிச்சயித்த பெண்ணின் 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை – ஹோட்டல் ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறை

நிச்சயித்த பெண்ணின் 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை – ஹோட்டல் ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறை

போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக PDRM அதிரடி நடவடிக்கை - 42 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக PDRM அதிரடி நடவடிக்கை - 42 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

ஆகஸ்ட் 8 முதல் பாலோ – ஜே பி சென்ட்ரல் இடையிலான  தென் பிராந்தியத்திற்கான ரயில் சேவை விரிவாக்கம்

ஆகஸ்ட் 8 முதல் பாலோ – ஜே பி சென்ட்ரல் இடையிலான தென் பிராந்தியத்திற்கான ரயில் சேவை விரிவாக்கம்

நெகிரி செம்பிலானில் துணை ஆட்சிக் குழு உறுப்பினர் பதவிகளை அறிமுகப்படுத்த மந்திரி பெசார் பரிசீலனை

நெகிரி செம்பிலானில் துணை ஆட்சிக் குழு உறுப்பினர் பதவிகளை அறிமுகப்படுத்த மந்திரி பெசார் பரிசீலனை