Aug 2, 2026
Thisaigal NewsYouTube
2025 ஆம் ஆண்டு பட்ஜெட் நிதி ஒதுக்கீடு / 40 ஆயிரத்து 337 கோடி வெள்ளியாக இருக்கலாம்
தற்போதைய செய்திகள்

2025 ஆம் ஆண்டு பட்ஜெட் நிதி ஒதுக்கீடு / 40 ஆயிரத்து 337 கோடி வெள்ளியாக இருக்கலாம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 28-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கும் 2025 ஆண்டு பட்ஜெட்டிற்கான நிதி ஒதுக்கீடு, 403.7 பில்லியன் அல்லது 40 ஆயிரத்து 337 கோடி வெள்ளியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரபல நிதி ஆய்வியல் நிறுவனமான TA Securities Holdings Berhad மதிப்பீடு செய்துள்ளது.

இந்த மொத்த நிதி ஒதுக்கீட்டில் 305.7 பில்லியன் அல்லது 30 ஆயிரத்து 570 கோடி வெள்ளி நிர்வாக செலவினத்திற்கும், 97.9 பில்லியன் அல்லது 9 ஆயிரத்து 790 கோடி வெள்ளி மேம்பாட்டிற்கும் ஒதுக்கப்படலாம் என்று அந்த நிறுவனம் கோடிகாட்டியுள்ளது.

2025 இல் 76.4 பில்லியன் வெள்ளி அல்லது 3.7 விழுக்காடு என மிக குறைவான நிதிப்பற்றாக்குறைக்கு வித்திடக்கூடிய செலவினங்களுடன் ஒப்பிடுகையில் மிக வலுவான வருவாய் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட் வகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த நிறுவனம் கூறுகிறது.

ஒட்டுமொத்தத்தில் 2026 ஆம் ஆண்டில் சரியான பொருளியல் வளர்ச்சிக்கு அடித்தளமிடக்கூடிய அஸ்திவாரமாக பிரதமர் தாக்கல் செய்யக்கூடிய 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக TA Securities Holdings Berhad கூறுகிறது.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்