Feb 18, 2026
Thisaigal NewsYouTube
காச நோய் தொற்றுக்கு உள்ளானவர்களில் 85 விழுக்காட்டினர் உள்ளூர்வாசிகள்: சுகாதாரத்துறை தகவல்
தற்போதைய செய்திகள்

காச நோய் தொற்றுக்கு உள்ளானவர்களில் 85 விழுக்காட்டினர் உள்ளூர்வாசிகள்: சுகாதாரத்துறை தகவல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.18-

மலேசியாவில் பதிவாகியுள்ள காச நோய்த் தொற்றுகளில் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 85 விழுக்காட்டினர் உள்ளூர்வாசிகள் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

15 விழுக்காட்டினர் மட்டுமே வெளிநாட்டினர் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

வெளிநாட்டினரால் தான் நாட்டில் காச நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக, கடந்த சில நாட்களாக, பொதுமக்களிடையே நிலவி வரும் கருத்துகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, இத்தகவலானது வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளூர்வாசிகளிடையே அதிகமாகப் பரவி வரும் காச நோய்த் தொற்றுகளை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் ஸுல்கிஃப்லி எச்சரித்துள்ளார்.

மேலும், நெரிசலான வாழ்க்கைச் சூழல்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற சமூக-பொருளாதார காரணிகளுடன் நெருங்கிய தொடர்புடைய காச நோயை, வறுமை நோய் என்றும் அவர் விவரித்துள்ளார்.

எனவே, காச நோயின் அறிகுறிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸுல்கிஃப்லி வலியுறுத்தியுள்ளார்.

Related News

கூலாயில் மோட்டார் விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான தம்பதி

கூலாயில் மோட்டார் விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான தம்பதி

அரசியல் விமர்சகர் முரே ஹண்டருக்கு எதிரான அவதூறு வழக்கைத் திரும்பப் பெற்றது எம்சிஎம்சி

அரசியல் விமர்சகர் முரே ஹண்டருக்கு எதிரான அவதூறு வழக்கைத் திரும்பப் பெற்றது எம்சிஎம்சி

ரொட்டி செனாய், பானத்திற்கு 120 வெள்ளி கட்டணம்  வசூலித்தது ஏன்? -  சிரம்பான் உணவகத்திற்கு அமைச்சு நோட்டீஸ்

ரொட்டி செனாய், பானத்திற்கு 120 வெள்ளி கட்டணம் வசூலித்தது ஏன்? - சிரம்பான் உணவகத்திற்கு அமைச்சு நோட்டீஸ்

அதிகரித்து வரும் குடும்ப உறுப்பினர்களின் கொலை - தற்கொலைச் சம்பவங்கள்: உள்ளூர் சமூக ஆதரவு மையங்களை மேம்படுத்த அமைச்சர் நான்சி சுக்ரி உறுதி

அதிகரித்து வரும் குடும்ப உறுப்பினர்களின் கொலை - தற்கொலைச் சம்பவங்கள்: உள்ளூர் சமூக ஆதரவு மையங்களை மேம்படுத்த அமைச்சர் நான்சி சுக்ரி உறுதி

செராதிங் குடும்பக் கொலை - தற்கொலை துயரச் சம்பவம்: பகாங் சுல்தான் ஆழ்ந்த வருத்தம்

செராதிங் குடும்பக் கொலை - தற்கொலை துயரச் சம்பவம்: பகாங் சுல்தான் ஆழ்ந்த வருத்தம்

அம்பாங்கில் ஏற்பட்ட தீ விபத்து: 2 வீடுகள், 2 கார்கள் சேதம்

அம்பாங்கில் ஏற்பட்ட தீ விபத்து: 2 வீடுகள், 2 கார்கள் சேதம்