Jun 28, 2026
Thisaigal NewsYouTube
ரோஹிங்யா சமூகத்தினரின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் - மலாக்கா முதல்வர் நம்பிக்கை
தற்போதைய செய்திகள்

ரோஹிங்யா சமூகத்தினரின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் - மலாக்கா முதல்வர் நம்பிக்கை

Share:

ஜாசின், ஜூன்.28-

ரோஹிங்யா சமூகத்தினரின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது மாநில அரசின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருப்பதாக மலாக்கா மாநில முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ராவுஃப் யுசோ தெரிவித்துள்ளார்.

ரோஹிங்யா குடியேறிகளைச் சட்டபூர்வ நடைமுறைகளின் அடிப்படையில், பாதுகாப்பாக வங்காளதேசம், மியன்மார் அல்லது மூன்றாவது நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் மாநில அரசாங்கம், கூட்டரசு அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், இவ்விவகாரங்களில் முழுமையான, இணக்கமான மற்றும் மனிதாபிமான அணுகுமுறையின் அடிப்படையில் தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அப்துல் ராவுஃப் யுசோ தெரிவித்துள்ளார்.

உள்ளூர் மக்களின் கவலைகளுக்குத் தீர்வு காண்பதுடன், சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதே மாநில அரசாங்கத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்று என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Related News