தமது காலணியின் இடுக்கில் ரகசிய கேமராவை பதுக்கி வைத்து, பெண்களின் உள்ளாடையை பதிவு செய்து வந்ததாக நம்பப்படும் காமூகன் ஒருவனை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் முதல் தேதி காலை 11.47 மணியளவில் கோத்தா டாமன்சாராவில் பேரங்காடி மையம் ஒன்றில் நிபுணத்துவ மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த 35 வயது காப்புறுதி பெண் முகவர் ஒருவரிடம் சம்பந்தப்பட்ட ஒருவர் இந்த ஆபாச சேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்பில் அந்த மாதுவின் பிடியிலிருந்து தப்பித்த நபரை போலீசார் தேடி வருவதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ரிதீன் தெரிவித்துள்ளார்.

Related News

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்

பங்சாரில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்

போலீஸ்காரர் உயிரிழந்த விபத்து: 80 வயது மூதாட்டி கைது

மலேசியாவின் AI, 5G மற்றும் டிஜிட்டல் மாற்றத் திட்டங்களை முன்னெடுப்பதில் பீடுநடை போடுகிறார் கோபிந்த் சிங் டியோ


