இன்று வெள்ளிக்கிழமை காலை, லங்காவி அருகேயுள்ள கம்போங் பாடாங் காங்பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 40 வயதுடைய ஆடவர் முகம் மற்றும் நெஞ்சுப் பகுதியில் தீக்காயம் அடைந்தார். இந்த விபத்தில் அவரது 27 பூனைகள் உயிரிழந்தன.
இச்சம்பவம் குறித்து காலை 8.47 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாகவும், சுமார் 15 நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றதாகவும் லங்காவி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் 4-வது மண்டலத் தலைவர் முகமது ஜம்ரி அப்துல் கனி தெரிவித்தார்.
வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்த போது, அவ்வீட்டின் வரவேற்பறையானது சுமார் 55% எரிந்து சேதமடைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இவ்விபத்தில் முகம் மற்றும் நெஞ்சில் சுமார் 30 விழுக்காடு தீக்காயம் அடைந்த அந்த ஆடவர் சிகிச்சைக்காக சுல்தானா மலிஹா மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவரது வீட்டில் கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 வளர்ப்புப் பூனைகளில் 27 பூனைகளும் உயிரிழந்தன.








