கெமாமான் கம்போங் கோங் லிமாவ் பகுதியில் பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கும் பட்டாசு விற்பனை செய்யும் கூடாரமும் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. சம்பவ இடத்திற்கு விரைந்த 22 தீயணைப்பு வீரர்கள், பட்டாசுகள் வெடித்துச் சிதறிய நிலையிலும் சுமார் 19 நிமிடங்களில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து, அஃது அருகில் பரவாமல் தடுத்த தாக சுக்காய், தீயணைப்பு நிலையத் தலைவர் முகமது ஹனிப் செ காலித் தெரிவித்தார். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், தீ விபத்துக்கான காரணம், நேர்ந்துள்ள இழப்பு மதிப்பு ஆகியன குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் முகமது ஹனிப் தெரிவித்துள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்


