கெமாமான் கம்போங் கோங் லிமாவ் பகுதியில் பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கும் பட்டாசு விற்பனை செய்யும் கூடாரமும் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. சம்பவ இடத்திற்கு விரைந்த 22 தீயணைப்பு வீரர்கள், பட்டாசுகள் வெடித்துச் சிதறிய நிலையிலும் சுமார் 19 நிமிடங்களில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து, அஃது அருகில் பரவாமல் தடுத்த தாக சுக்காய், தீயணைப்பு நிலையத் தலைவர் முகமது ஹனிப் செ காலித் தெரிவித்தார். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், தீ விபத்துக்கான காரணம், நேர்ந்துள்ள இழப்பு மதிப்பு ஆகியன குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் முகமது ஹனிப் தெரிவித்துள்ளார்.

Related News

பெக்கான் நானாஸ்: கடும் சூறாவளியால் 28 வீடுகள் சேதம்; பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

பாரம்பரியக் கலாச்சாரமே மலாக்காவின் பலம்; தெருவோர டிஸ்கோக்கள் தேவையில்லை: டாக்டர் அக்மல் சாலே காட்டம்

மதுபோதை ஓட்டுநரின் காரால் மோதப்பட்டு தம்பதியர் உயிரிழப்பு

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 4 இளைஞர்கள் கைது; 271 அபராதங்கள் விதிப்பு

மலேசியாவில் வெப்ப அலையினால் 56 பேர் பாதிப்பு; இருவர் பலி


