ஷா ஆலாம்,ஜன.10
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துபாய் நகர்வு தொடர்பாக 75 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமாட் ஷுஹைலி முஹமாட் சேய்ன் தெரிவித்துள்ளார்.
31 புகார்களை அரசியல் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகளும், 44 புகார்களை பொது மக்களும் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் 1998 ஆம் ஆண்டு தொடர்புத்துறை மற்றும் பல்லூடக சட்டத்தின் 233 பிரிவின் கீழ் போலீசார் சில தனி நபர்களை விசாரணைக்கு அழைக்கவிருப்பதாக முஹமாட் ஷுஹைலி மேலும் கூறினார்.








