ஜோர்ஜ்டவுன்,ஜன.12
சுங்ஙாய் டுவா நீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து மாநிலத்திலுள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட நீர் விநியோக மறுசீரமைப்பு இன்று காலை 6 மணி அளவில் தொடங்கப்பட்டதாக பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP) அறிவித்துள்ளது.
Bukit Dumbar, Pumping Station Complex ஆகிய இடத்திற்கு அருகில் குடியிருப்பவர்களுக்கு நீர் விநியோகம் முதலில் சென்றடைவதுடன் பிறகு கட்ட கட்டமாக மற்ற இடங்களுக்கு நீர் வந்தடையும் என்று PBAPP குறிப்பிட்டிருந்தது.
செபராங் ஜெயாவில் 84 விழுக்காடு நீர் விநியோகம் இரண்டாம் கட்டத்தில் சீரமைக்கப்பட்டதுடன் மூன்றாம் கட்ட நீர் விநியோகம் வருகின்ற ஞாயிற்றுகிழமைக்குள் முழுமையாக சென்றடையப்படும் என்று நம்பப்படுவதாக PBAPP ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Sungai Perai நீருக்கடியில் குழாய் நேற்று சரிசெய்யப்பட்டதுடன் மீண்டும் செயல்படுத்த தொடங்கியுள்ளதாக PBAPP அதில் விளக்கியிருந்தது.








