Nov 5, 2025
Thisaigal NewsYouTube
ரவாங்கில் 13 வயது சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்த ஆடவர் கைது!
தற்போதைய செய்திகள்

ரவாங்கில் 13 வயது சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்த ஆடவர் கைது!

Share:

கோம்பாக், நவம்பர்.05-

ரவாங், பண்டார் தாசேக் புற்றியில் கடந்த திங்கட்கிழமை, 13 வயது சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்ததாக நம்பப்படும், 54 வயதான ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அச்சிறுமியின் அண்டை வீட்டுக்காரரான அந்த ஆடவர், கடந்த திங்கட்கிழமை இரவு 8.15 மணியளவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக கோம்பாக் காவல்துறைத் தலைவர் நோர் அரிஃபின் நாசீர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அச்சிறுமியின் 35 வயதான தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் அந்த ஆடவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆடவருக்கு, வேறு எந்த குற்றப் பிண்ணனியும் இல்லை என்பதை உறுதிச் செய்துள்ள போலீசார், அந்நபரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணை செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Related News