Mar 13, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் குடிநுழைவு இ-கேட்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின
தற்போதைய செய்திகள்

ஜோகூர் குடிநுழைவு இ-கேட்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின

Share:

ஜோகூர் பாரு, ஜனவரி.12-

சிங்கப்பூருடனான இரு தரைவழி குடிநுழைவுச் சாவடிகளிலும் உள்ள இ-கேட் அமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறு தற்போது முழுமையாக சரி செய்யப்பட்டு, மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக ஜோகூர் மாநில பொதுப்பணி, போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்பு குழு ஆட்சிக்குழு உறுப்பினர் முஹமட் ஃபாஸ்லி முஹமட் சாலே தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் செயல்படத் தொடங்கிய இந்த இ-கேட் அமைப்பில், கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் முழுமையான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

என்றாலும், கடந்த சனிக்கிழமை முதல் இந்த தொழில்நுட்பக் கோளாறானது சுமார் 48 மணி நேரங்கள் நீடித்தது.

சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்தில் உள்ள குடிநுழைவில், உள்நுழைய 39 இ-கேட்களும், வெளியேற 29 இ-கேட்டுகளும் செயல்பட்டு வந்தன.

அதேவேளையில், சுல்தான் அபு பாக்கார் கட்டிடத்தில் உள்ள குடிநுழைவில், மொத்தம் 12 இ-கேட்டுகள் செயல்பாட்டில் இருந்தன.

இந்நிலையில், இந்த தொழில்நுட்ப முடக்கமானது, மலேசியர்களை பாதிக்கவில்லை என்றும், வெளிநாட்டினருக்கு மட்டுமே சிக்கலை ஏற்படுத்தியதாகவும் எல்லைக் கட்டுப்பாட்டு முகமையான ஏகேபிஎஸ் தெளிவுபடுத்தியுள்ளது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்