Dec 2, 2025
Thisaigal NewsYouTube
எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 3 மாநிலங்கள்  பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பைத் தடுக்க முடியாது
தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 3 மாநிலங்கள் பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பைத் தடுக்க முடியாது

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஹரிராயா திறந்த இல்ல பொது உபசரிப்பை பாஸ் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள 3 மாநிலங்களில் நடத்த முடிவு செய்திருப்பது அரசியல் எதிரிகளைச் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநில அரசாங்கங்கள் ஒரு போட்டிக் கூட்டணியிலிருந்து பிரதமருக்கு அன்பான விருந்தினர்களாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஏனெனில், அவர்கள் அரசியல் மதிப்பீட்டு புள்ளிகளைப் பெறுவதற்கு ஒரு சமய நிகழ்வைப் பயன்படுத்த முடியாது.

ஆறு மாநிலங்களின் தேர்தலை மனதில் வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளனர்.
“இது அன்வாரின் அரசியல் வியூகமாகும். சாதாரண மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாகவே மூன்று மாநிலங்களில் அன்வார் நடத்தும் இந்தத் திறந்த இல்ல பொது உபசரிப்பு பார்க்கப்படுகிறது.

“இது நிச்சயமாக ஜூன் இறுதியில் அல்லது ஜூலை தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலுடன் தொடர்புடையது என்பதில் ஐயமில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்