போர்ட் டிக்சன், தெலுக் கெமாங் பகுதியில் களைக்கொல்லி மருந்தை அருந்திய 21 வயதான மியன்மார் பெண்ணும், அவரது ஒரு வயது மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பெண் முதலில் களைக்கொல்லி மருந்தை அருந்திய பின்னர் அதையே தனது மகளுக்கும் கொடுத்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போர்ட் டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லான் உதின் தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தை பிறந்ததிலிருந்து அப்பெண் மனஅழுத்தத்தில் இருந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும், தற்போது தாயும் மகளும் போர்ட் டிக்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் இருவரின் நிலையும் சீராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








