Dec 3, 2025
Thisaigal NewsYouTube
புக்கிட் டாமான்சாரா திட்டத்திற்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை
தற்போதைய செய்திகள்

புக்கிட் டாமான்சாரா திட்டத்திற்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.06-

கோலாலம்பூர் புக்கிட் டாமான்சாராவில் 60 மாடிகளைக் கொண்ட கட்டடத்தைக் கட்டுவதற்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

கோலாலம்பூர் ஜாலான் சமந்தானில் உள்ள ஓரிட மக்கள், அந்த பெரும் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அந்தத் திட்டத்திற்கு இன்னும் எந்தவோர் அனுமதியும் வழங்கப்படவில்லை என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் தெளிவுபடுத்தியது.

கோலாலம்பூரில் உள்ள விஸ்மா டாமான்சாரா மறுமேம்பாட்டுத் திட்டத்தை எதிர்த்து கடந்த சனிக்கிழமை காலையில் புக்கிட் டாமான்சாராவில் வசிக்கும் முக்கியப் புள்ளிகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

அந்தத் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். முன்னாள் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின், ஏர் ஆசியா கெப்பிடல் தலைமை செயல்முறை அதிகாரி டான் ஶ்ரீ டோனி பெர்னாண்டஸ், முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் சகோதரரும், ஆசியான் வணிக ஆலோசனைக் குழுமத்தின் தலைவருமான டான் ஶ்ரீ நஸிர் ரஸாக், பிரபல பாடகி டத்தோ ஷீலா மஜிட் ஆகியோர், போராட்டத்தில் குதித்தவர்களில் அடங்குவர்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி