May 9, 2026
Thisaigal NewsYouTube
கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது
தற்போதைய செய்திகள்

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

Share:

சிப்பாங், டிசம்பர்.03-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முனையம் 1-இல், 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்களைச் சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

அதன் மதிப்பு சுமார் 2.5 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 19-ஆம் தேதி, விமான நிலையத்தின் பாதுகாப்புச் சோதனையின் போது, சீனா மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த இருவரைக் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களிடமிருந்து போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

அவர்களின் பயணப் பெட்டிகளைச் சோதனையிட்ட போது, அதனுள் போதைப் பொருட்களானது மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதாக கேஎல்ஐஏ சுங்கத்துறை இயக்குநர் ஸுல்கிஃப்லி முகமட் தெரிவித்துள்ளார்.

சீனப் பிரஜையின் பெட்டியில், மஞ்சள் நிறத்திலான பாக்கெட்டுகளில் கெத்தாமின் என்ற போதைப் பொருளும், தாய்லாந்துப் பிரஜையின் பெட்டியில், மாத்திரை வடிவிலான கொக்கேன் என்ற போதைப் பொருளும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ஸுல்கிஃப்லி முகமட் குறிப்பிட்டுள்ளார்.

சிகரெட், மதுபானங்கள், பட்டாசுப் பொருட்கள், போதைப் பொருட்கள், வாகனங்கள் உள்ளிட்டவைகள் கடத்தப்படுவதால் அரசாங்கத்திற்கு வருவாய் இழப்பு மட்டுமின்றி, அவை தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் ஸுல்கிஃப்லி முகமட் தெரிவித்துள்ளார்.

Related News

தாயின் அன்பில் பிறக்கிறது மனிதம்; தாயின் தியாகத்தில் உயர்கிறது நாடு!  – டத்தோஸ்ரீ ரமணன் அன்னையர் தின வாழ்த்து

தாயின் அன்பில் பிறக்கிறது மனிதம்; தாயின் தியாகத்தில் உயர்கிறது நாடு! – டத்தோஸ்ரீ ரமணன் அன்னையர் தின வாழ்த்து

மலாய் ஆட்சியாளர்களை விமர்சிக்கும் போலிக் கணக்குகளை தடுக்காத மெட்டா மீது சட்ட நடவடிக்கை / அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் எச்சரிக்கை

மலாய் ஆட்சியாளர்களை விமர்சிக்கும் போலிக் கணக்குகளை தடுக்காத மெட்டா மீது சட்ட நடவடிக்கை / அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் எச்சரிக்கை

சுங்கை பூலோ மக்களுக்கு 10 ஆயிரம் இலவச சைக்கிள்கள் - டத்தோஸ்ரீ ரமணன் வியப்பூட்டும் அறிவிப்பு

சுங்கை பூலோ மக்களுக்கு 10 ஆயிரம் இலவச சைக்கிள்கள் - டத்தோஸ்ரீ ரமணன் வியப்பூட்டும் அறிவிப்பு

மலேசியக் கடற்படைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள ஏவுகணைகளுக்கான உரிமங்கள் நார்வே வசம் உள்ளது - கேடிஏ தகவல்

மலேசியக் கடற்படைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள ஏவுகணைகளுக்கான உரிமங்கள் நார்வே வசம் உள்ளது - கேடிஏ தகவல்

மலாக்காவில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை ஹாக்ஸ்பில் கடல் ஆமை

மலாக்காவில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை ஹாக்ஸ்பில் கடல் ஆமை

கோத்தா திங்கியில் அதிவேக சொகுசு கார் விபத்து: சிங்கப்பூர் தம்பதி பலி

கோத்தா திங்கியில் அதிவேக சொகுசு கார் விபத்து: சிங்கப்பூர் தம்பதி பலி