Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பொய்யான தகவல் பகிர்வு: 2 டிக் டாக் கணக்கு உரிமையாளர்களுக்கு எதிராக விசாரணை
தற்போதைய செய்திகள்

பொய்யான தகவல் பகிர்வு: 2 டிக் டாக் கணக்கு உரிமையாளர்களுக்கு எதிராக விசாரணை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.03-

முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரணம் குறித்து அவதூறு ஏற்படுத்தியது மற்றும் இஸ்ரேலுடன் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமைத் தொடர்புப்படுத்தி, பொய்யானத் தகவல்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து, அச்சுறுத்தலை ஏற்படுத்தியது தொடர்பில் இரண்டு டிக் டாக் கணக்கு உரிமையாளர்களுக்கு எதிராக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இரண்டு டிக் டாக் கணக்கு உரிமையாளர்களையும் போலீசார் அடையாளம் கண்டு விட்டனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் போலீசார் எந்த சிக்கலையும் எதிர்நோக்கவில்லை என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சி.ஐ.டி. இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

இவ்விருவரின் விவகாரத்தை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் D5 பிரிவு கையாளுகிறது. அவ்விருவருக்கும் எதிராக 1948 ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டமும், 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டமும் பிரயோகிக்கப்படவிருக்கிறது என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.

உண்மைக்குப் புறம்பாக அவதூறுகளை ஏற்படுத்தும் தரப்பினருக்கு எதிராக எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பர் என்று அவர் எச்சரித்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு