லஞ்ச ஊழல் தொடர்பில், மற்றொரு அரசியல் பெரும் புள்ளியின் மகன், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். விசாரணை வளையத்திற்குள் இழுக்கப்பட்டுள்ளார். ஒரு வர்த்தகரான அந்த பிரபல அரசியல் வாதியின் மகன் பல கேள்விகளுக்கு இடமான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
புத்ராஜெயாவில் உள்ள எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்திற்கு நேற்று அழைக்கப்பட்ட அந்த அரசியல் வாதியின் மகனிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக எஸ்.பி.ஆர்.எம். வட்டாரங்கள் கூறுகின்றன.
அந்த வர்த்தகரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு பல கேள்விகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அதிகமான தகவல்களைப் பெறமுடியவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பந்தப்பட்ட வர்த்தகரின் பெயர் வெளிநாட்டில் கோடிக்கணக்கான வெள்ளியைச் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ள நபர்களின் பெயர்களை அம்பலப்படுத்தியிருக்கும் பனாமா பேப்பார்ஸ் ஆவணத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


